×

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கறிஞர் மிலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rabindranath ,Chennai High Court ,Chennai ,Honey ,2019 people election ,GP ,iCort ,Rabindra Nath ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...